torsdag den 30. september 2010

søndag den 26. september 2010

விஜய் சீமான் இயக்கத்தில்


வேலாயுதம் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்திலும், அதற்கடுத்து சீமான் இயக்கத்தில் பகலவனிலும் நடிக்கிறார் விஜய்.

இந்த இரு படங்களையும் குறுகிய காலத்தில் முடித்து வெளியிடவேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் நடித்த காவலன் படம் தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு யாவரும் நலம் விக்ரம் குமார் இயக்குகிறார். நடிகர் விக்ரம் நடிக்கவிருந்த படம் இது. ஏ எம் ரத்னம் தயாரிக்கிறார். தனக்கு கில்லி என்ற பெரிய வெற்றிப் படம் தந்த ரத்னத்துக்கு உதவி, விஜய் தானாகவே முன்வந்து நடித்துத் தரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் முடிந்ததும் சீமான் இயக்கத்தில் பகலவனில் நடிக்கிறார். இதற்கிடையே 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் எப்போது துவங்கும் என்பது குறித்து ஏதும் ஐடியா இல்லாததால், கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் வேகம் காட்டுகிறார் விஜய்.

2011-ல் இவற்றை முடித்துவிட்டு இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

onsdag den 22. september 2010

டைரக்டர் சித்திக் (காவலன்)




சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்.

"எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"

மேலும் படங்களுக்கு...

"இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"

"முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது? விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!"

"இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?"

"அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும்விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு. நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும். எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"

"மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..."

"அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!"

"நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?"

"மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம். ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு. நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது. அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"

kaavalan pap

fredag den 17. september 2010

அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! - விஜய்


அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய்.

கேரளாவில் வெற்றிபெற்ற 'பாடிகார்ட்' என்ற மலையாள படம், 'காவலன்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. 'பாடிகார்ட்' படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.

'காவலன்' படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். 'பாடிகார்ட்' படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் 'காவலன்' படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

விஜய் கூறுகையில், "இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். என் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இருக்கும்.

காவல்காரன் கிடைக்கல...

இந்த படத்துக்கு, 'டைட்டில்' பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில், 'காவல்காரன்' என்று பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வேறு சில பெயர்களுக்குப் பிறகு கடைசியாக, காவலன் என்ற பெயர் அமைந்து இருக்கிறது.

சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, வடிவேல் தலையில் சுத்தியல் விழுகிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.

அசினுடன்...

அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் எனண நம்புகிறேன்.

படப்பிடிப்பின் இடையில் அசின் இந்தி படத்துக்கு போய்விட்டார். 2 மாதங்களை வீணாக்க வேண்டாமே என்றுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன்...,'' என்றார்.

அசின் பேசுகையில், "தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும்.

மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.

விஜய்யுடன் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் 'காவலன்,' மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.''

நடிகர் வடிவேல், டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் நன்றி கூறினார்.

kaavalan poster




THE MAN OF kaavlan










torsdag den 16. september 2010

kaavakan hq unseen





காவலன் டிசம்பரில்?

<விஜய் நடித்துள்ள காவலன் படம் டிசம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

விஜய் நடித்து கடைசியாக வெளியான படம் சுறா. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கிய படம் காவல்காரன். இப்படத்தின் பெயருக்கு சத்யாமூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்காதல் என்று பெயர் மாற்றினார்கள்.

ஆனால் இந்தத் தலைப்பு விஜய்க்குத் திருப்தி தரவில்லையாம். இதையடுத்து இப்போது காவலன் என படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.

காவலன் படம் விஜய்யின் 51வது படமாகும். மலையாளத்து சித்திக் இயக்கியுள்ளார். ஜோடியாக ஆசின் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கும் அதையடுத்து ஐரோப்பாவுக்கும் செல்லவுள்ளனராம். இதை முடித்து விட்டால் படம் முடிந்து விடுமாம்.

இதையடுத்து டிசம்பரில், படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதேபோல மறுபக்கம் வேலாயுதம் படமும் வேகமாக வளர்ந்து வருகிறதாம்.

kaavalan unseen





fredag den 3. september 2010

கோல்கொண்டாவில் வேலாயுதம்


இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திர மாநிலம் கோல்கொண்டாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.அங்கு வைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பிரமாண்ட பொருட் செலவில் இயக்கும் படம் வேலாயுதம். விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு இரட்டை ஜோடிகளாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர்.

வழக்கமாக விஜய்யுடன் இணையும் வடிவேலு இப்படத்தில் இல்லை. மாறாக சந்தானம், பாண்டியராஜன், சத்யன் என மும்முனைக் காமெடித் தாக்குதலுடன் வேலாயுதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா.

முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் வைத்த ராஜா தற்போது ஆந்திர மாநிலம் கோல்கொண்டாவில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

விஜய்யும், வில்லன் கோஷ்டியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக் காட்சியை கோல்கொண்டாவில் சுடச் சுட படமாக்கி வருகிறார்கள்.