søndag den 28. august 2011

velayutham






இன்று வேலாயுதம் பாடல் வெளியீடு!


விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இது குறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இது குறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.

søndag den 21. august 2011

மதுரைக்கு வரும் விஜய்-வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!


மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.

150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

மேலும் காவலன் பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து விட்டதால் வேலாயுதம் விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரமாண்ட பேரணி மூலம் அழைத்துச் செல்லவுள்ளனர்.

மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், வேலாயுதம் பட பேனர்கள் பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விழாவில் வேலாயுதம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப் பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நாயகிகள் ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.

søndag den 14. august 2011

வேலாயுதம் ஓடியோ வெளியாகிறது


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் திகதி நடக்கிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஓடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஓடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர்.

ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம்.

இப்போது படத்தின் ஓடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். வரும் ஓகஸ்ட் 28-ம் திகதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.