lørdag den 23. april 2011

விஜய் படத்துக்கு கட் சொல்ல மறந்த டைரக்டர்


ஓஸ்கர் தயாரிப்பில் விஜய் நடிப்பில் 'வேலாயுதம்' படம், எம்.ராஜா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வில்லன்களின் பெயர்களை மட்டும் மறைத்து வைத்துள்ளார்களாம்.
இளைஞன் ஒருவன் தலைவனாக உயர்கிறான் என்பதை சொல்கிறது வேலாயுதம் படம்.

கிராமமும் நகரமுமாக மாறி, மாறிப்பயணம் செய்கிற கதை. இது முக்கோண காதல் கதை.

அண்ணன், தங்கை பாசத்தை அழகாகவும் புது விதமாகவும் சொல்லும் படம் இது.

இது ஒரு ஆக்ஸன் படம் மட்டுமல்ல. நாயகன், நாயகியர்கள் அழகான நடிப்பை வெளிப்படுத்தும் படம்.

நல்லதொரு கதை சொல்லும் படமாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாகவும் இருக்கும்.

கிராமத்து இளைஞனாக, பால்காரனாக கதாநாயகன் விஜய் நடித்துள்ளார். ஊரின் சுவாசத்துக்கு காற்றாக நாயகன் விஜய் வலம் வருகிறார்.

காதல், பாசம் உள்ள ஆவேச இளைஞனாக சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு நடித்துள்ளார். நாயகி ஜெனிலியா 'பத்திரிக்கை நிருபராக' வருகிறார்.

இன்னொரு நாயகி ஹன்சிகா பொதுத்துறையில் உள்ள பெண்ணாக நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தை இயக்கும் போது,சில இடங்களில் 'கட்' சொல்ல மறந்துள்ளேன் என்று வேலாயுதம் பட இயக்குனர் எம்.ராஜா கூறியுள்ளாராம்.

Ingen kommentarer:

Send en kommentar