lørdag den 24. december 2011

நண்பன் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் மகிழ்ச்சி


தமிழ் திரையுலகில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(23.12.2011) பிரமாண்டமாக நடந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் நண்பன் இசைவெளியீட்டு விழா தமிழ்நாட்டின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நண்பன் திரைப்படத்தின் நாயகர்களான இளைய தளபதி விஜய், ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யராஜ், இளைய திலகம் பிரபு, சத்யன், அனுயா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நண்பன் இசைவெளியீட்டு விழாவில் ரசிகர்களின் மகிழ்ச்சி மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. விஜய் பேசும் போதெல்லாம் ரசிகர்கள் சப்தம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இளைய தளபதி விஜய், நான் சென்னையில் பிறந்தாலும், எனக்கு கோயம்புத்தூர் பாணியில் தமிழ் நன்றாக பேசுவேன். ஸ்ரீகாந்த் நன்றாக நடித்தார். ஷங்கர் சாரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம். அண்ணன் ஜீவா எங்களுடன் நன்றாக நடித்தார். படப்பிடிப்பிற்காக வசனம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எதையாவது சொல்லி சிரிக்க வைப்பார் என்று பேசினார்.

ஜீவா பேசும் போது, விஜய் சார் எவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும், ரொம்ப எளிமையாக இருப்பார். ஷங்கர் சார் படப்பிடிப்பில் கோபப்படாமல், அமைதியான முறையில் நடந்துகொள்வார். நண்பன் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று பேசினார்.

இயக்குனர் ஷங்கர் பேசும் போது எந்திரன் படப்பிடிப்பு, ஒருநாள் எதார்த்தமாக தாமதம் ஆனபொழுது 3 இடியட்ஸ் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு இதற்கான வாய்ப்பு வரும்போது ஒத்துக்கொண்டேன்.

விஜய், படப்பிடிப்புக்கு தாமதம் ஆகாமல் வருவார். நாளைக்கு நடக்க வேண்டிய வேலைகளை முன்கூட்டியே தயார் செய்து வருவார். சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு, விஜய் தான் படப்பிடிப்புக்கு சரியாக வருவது என்று புகழ்ந்தார்.

பின்பு இசை குறுந்தகடை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, இளைய திலகம் பிரபு பெற்றுக் கொண்டார்.

mandag den 5. december 2011

துப்பாக்கியில் விஜய்யுடன் இணையும் காஜல் அகர்வால்


இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கித் திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.இத்திரைப்படத்தைப்பற்றி நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, நான் சினிமா உலகில் நடிக்கும் முக்கியமான திரைப்படம் தான் இந்த துப்பாக்கி.

முதல் முறையாக இளைய தளபதி விஜய், இயக்குனர் முருகதாஸ் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுகிறேன். துப்பாக்கி படத்தில் இயல்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.

இதுவரையில் முருகதாஸ் திரைப்படங்களில் உள்ள கதாநாயகி கதாப்பாத்திரங்களை விட துப்பாக்கி படத்தில் வரும் கதாநாயகி கதாப்பாத்திரம் பலமானது.

இயக்குனர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் கதாநாயகியாக நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நண்பன் இசை வெளியீட்டிற்காக வருகை தரும் அமீர் கான்


நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் நண்பன். இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
நண்பன் திரைப்படம் பாலிவுட்டில் திரையிடப்பட்ட த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். பாலிவுட் நண்பனில் நடிகர் அமீர்கான் நடித்திருந்தார்.

தற்பொழுது நண்பன் இசைவெளியீட்டு விழா வருகிற 14 ஆம் திகதி சென்னை நேரு அரங்கில் நடைபெற உள்ளது.

இதையடுத்து நண்பன் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகர் அமீர்கானும், பாலிவுட்டில் நண்பனை இயக்கிய ராஜ் குமார் ஹிரானியும் கலந்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற டிசம்பர் 14 ஆம் திகதி இசைவெளியீட்டினைத் தொடர்ந்து, நண்பனை எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு பொங்கல் 14 ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

fredag den 25. november 2011

விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி


விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

torsdag den 17. november 2011

søndag den 6. november 2011

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.

இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.
இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

fredag den 4. november 2011

வெளிநாட்டில் வேலாயுதம் முன்னணி


யுகே பாக்ஸ் ஆஃபிஸில் வேலாயுதம் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியான முதல் ஐந்து தினங்களில் 17 திரையிடல்களில் 1.03 கோடியை வசூலித்துள்ளது. விஜய் படம் குறுகிய நாளில் ஒரு கோடியை தாண்டுவது யுகேயில் இதுவே முதல் முறை.

7ஆம் அறிவு முதல் ஐந்து தினங்களில் 19 திரையிடல்களில் 85.77 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரு காட்சிகள் அதிகமிருந்தும் வேலாயுதத்தைவிட குறைவாகவே வசூலித்துள்ளது.

tirsdag den 1. november 2011

வேலாயுத குழுவிற்கு விருந்து கொடுத்து அசத்திய விஜய்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த வேலாயுதம் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கேரளாவில் அதிக பிரிண்ட்களுடன் கூடுதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 830 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ள இப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.40 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

வேலாயுதம் வெற்றி பெற்றதற்காக விஜய் தனது வீட்டில் அப்படக்குழுவினருக்கு விசேஷ விருந்து அளித்தார்.

இவ்விருந்தில் இயக்குனர் ராஜா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ஜெயம்ரவியும் விருந்திற்கு வந்திருந்தார்.

தமிழகம் முழுவதும் வேலாயுதம் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது.

சென்னை வடபழனியில் 7 ஆம் அறிவு படம் திரையிடப்பட்ட கமலா திரையரங்கில் தற்போது வேலாயுதம் படம் திரையிடப்பட்டுள்ளது.

அத்திரையரங்கிற்கு விஜய் ரசிகர்கள் வடபழனி கோவிலில் மொட்டை அடித்து விட்டு ஊர்வலமாக வந்து படம் பார்த்தனர். இதில் பால் குட ஊர்வலமும் நடந்தது.

இயக்குனர் ராஜாவும் இத்திரையரங்கில் ரசிகர்களுடன் வந்து படம் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

வேலாயுதமும் 40 கோடியும்


விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.

mandag den 31. oktober 2011

வேலாயுதம் படத்தை பற்றி கூறுகிறார் நடிகர் விஜய்


நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது, இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது நான் நடித்த 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய வெற்றியாகியுள்ளது என்கின்றனர், ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார், ஓஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.

விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம், படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்த படம் வெற்றியானதற்கு எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர், எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர், அது தவறு அல்ல எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கின்றது என்றார்.

அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகயுள்ளது, இணையதளங்களில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது, அதை தடுக்க எனது ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

புதுப்படங்களை இது போல் இணையதளத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை, சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்துள்ளார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் நடிகர் விஜய்


நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி.
நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம். அதன்படி நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம்.

நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கி வந்தாராம் விஜய்.

søndag den 30. oktober 2011

சர்வதேச முகவராக விஜய்: கௌதம் பேட்டி


யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் சர்வதேச முகவராக விஜய் நடிக்கிறார்.
முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார்.
யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை.

அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டவில்லை. கடைசி சந்திப்பில் இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி விடவே மாட்டேன்னு அவரே சொன்னார்.

நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும்.

யோஹனுக்கான படப்பிடிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது என கௌதம் தெரிவித்துள்ளார்.

lørdag den 29. oktober 2011

விஜய் கலகல பேட்டி


விஜய்யின் வேலாயுதம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய ஹிட்டாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வெளியான விஜய்யின் எந்தப் படத்தைவிடவும் வேலாயுதத்தின் ஓபனிங் மிகப் பிரமாதம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய்யின் மாஸ் வேல்யூவை இப்படம் உறுதி செய்திருப்பதால் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் விஜய். வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு மீடியாவை சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு என்ற பூ‌ரிப்பான பேச்சுடன் உரையாடலை தொடங்கினார் விஜய்.

என்னுடைய 52 படங்களில் வேலாயுதம்தான் பெஸ்டுன்னு எல்லோரும் சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்கு. தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் இந்தப் படம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இப்போதான் அவரை சந்திச்சிட்டு வர்றேன். ஹேப்பியா சார்னு கேட்டேன். கவலையே இல்லை, படம் சூப்பர்ஹிட். இனி நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.

நீங்க எம்‌ஜிஆர் பாணியில் நடிச்ச படம் இதுதானே?

எம்‌ஜிஆர் பாணியில் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? அது தப்பும் கிடையாது. எம்‌ஜிஆர் பாணியில் படம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். முதல்ல நல்ல கதை வேணும். அது வேலாயுதம் படத்தில் இருக்கு.

நடிக்க வந்த புதிதில் ர‌ஜினி பாணியில் நடிப்பதா சொன்னீங்க?

எம்‌ஜிஆர், ர‌ஜினி ரெண்டு பே‌ரின் பாணியுமே எவர்கி‌‌ரீன். நான் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதை நான் மறுக்கலை.

படத்தோட இசை...?

பாடல்கள் எல்லாமே ஹிட். ரொம்ப முக்கியமா விஜய் ஆண்டனியோட ‌ரீரெக்கார்டிங். அது படத்துக்கு பெ‌ரிய பலம். இந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லணும். அவரும் இந்தப் படத்தோட கதை விவாதத்துல பங்கேற்றார். அப்புறம் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் சார். அவரும் பல ஆலோசனைகள் தந்தார். தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏன் எதுக்குன்னு கேட்காம கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இப்படியொரு அருமையான வெற்றியை தந்த இயக்குனர் ராஜாவுக்கு என்னோட நன்றி.

mandag den 17. oktober 2011

பெங்களூரில் அசத்திய விஜய்!


வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.

மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,

எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.

எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.

விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.

தீபாவளி செம விருந்தா இருக்கும் வேலாயுதம்


‘‘எனக்கு எல்லாருடைய படங்களும் பிடிக்கும். ‘மங்காத்தா’வாகட்டும், ‘அங்காடித் தெரு’வாகட்டும் முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அதேபோல என் படங்களும் எல்லாத் தரப்பினருக்கும் பிடிக்கணும்னு நினைப்பேன். அதுக்கான உழைப்பு என் எல்லாப்படங்கள்லயும் இருக்கும். அதுல உச்சம் இந்தப்படம்...’’ என்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘வேலாயுதம்’ இயக்குநர் எம்.ராஜா.

‘‘அதிலயும் இதுல விஜய் ஹீரோவாகிட்டதால, அவருக்கேத்த ஹீரோயின்கள், அவருக்கேத்த வில்லன்கள், அவங்க தாங்கற அளவுக்குப் பிரச்னைகள், அதுக்கான பேக்ட்ராப்கள்னு படம் பெரிசா போய்க்கிட்டேயிருந்தது. அது அத்தனைக்கும் ஈடு கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தா இந்தப் படத்தைக் கொடுக்கிறோம். அதுலயும் செம விருந்தா இருக்கும் ‘வேலாயுதம்’...’’ என்ற ராஜா, கடைசியாக காஷ்மீர் சென்று படத்துக்கான பாடலைப் படம்பிடித்து வந்த அனுபவத்தைச் சொன்னார்.

‘‘காஷ்மீர்ல ஸ்ரீநகர் தாண்டி 200 கிலோமீட்டர்ல இருக்கிற அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் ‘பகல்காம்’. எந்த சீசன்லயும் போகமுடியும்ங்கிறது அந்த இடத்தோட சிறப்பு. ஆனா என்ன ஒண்ணு, அங்கே போக மோட்டார் வாகனங்களால முடியாது. முழுக்க குதிரை சவாரிதான். நாங்க தங்கியிருந்த ஹோட்டல் வாசல்ல கார்கள் போல ஆயிரக்கணக்கில குதிரைகள் சவாரிக்காகக் காத்திருந்ததைப் பார்த்து அசந்து போனோம். விஜய், ஹன்சிகா, ஜெனிலியான்னு நாங்க எல்லாருமே குதிரைல போனது மறக்க முடியாத அனுபவம். அதேபோல காஷ்மீர் கலவர பூமியானதால, ராணுவத்தினர் காவல்ல படம் பிடிச்சதும் த்ரில்லான அனுபவம்.

‘முளைச்சு மூணு இலை விடல...’ங்கிற விவேகா எழுதிய பாடலை அங்கே எடுத்தோம். அந்தப் பாடலோட சிறப்பு... அதுல விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூணு பேருமே நடிக்கிறதுதான். ஆனா ஒரு ஹீரோயினோட டூயட் பாடறது இன்னொரு ஹீரோயினுக்குத் தெரியாது. அதை சரியா மேட்ச் பண்ணி அழகா கம்போஸ் பண்ணியிருந்தார் ஷோபி மாஸ்டர். படத்தில வரிசைப்படி நான்காவதா வர்ற இந்தப்பாடல், விஜய்யோட மெலடிகள்லயே அலாதியா அமைஞ்சிருக்கு. பரபரன்னு ஃபாஸ்ட்டா ஆடற விஜய்க்கு இத்தனை மெலடி சாத்தியமான்னுதான் முதல்ல இந்தப்பாடலைக் கேட்கும்போது தோணும். ஆனா சாத்தியப்பட்டுதுங்கிறதுதான் உண்மை. 7&8 ரிதம்னு சொல்லக்கூடிய அற்புதமான மெலடியில விஜய் ஆன்டனி இசைச்சிருக்க இந்தப்பாடல்தான் என்னோட ரேட்டிங்படியே நம்பர் ஒன். விஜய் ஆன்டனியோட மெலடி வரிசைலயும் இந்தப்பாடல் இன்னைக்கு இடம் பிடிச்சிருக்கு..!’’

விஜய் பற்றிப் பேசும்போது சில டெசிபல்கள் சப்தம் கூடியது மென்மையாகப் பேசும் ராஜாவின் பேச்சில்...

‘‘இதுவரை தமிழ்ல வராத கதை இதுங்கிறது போலவே, விஜய் இதுவரை ஏற்காத கேரக்டரை இதுல ஏற்றிருக்கார். அவர் தகுதிக்கு எவ்வளவு இறங்கி நடிக்க முடியுமோ அவ்வளவு இறங்கி நடிச்சிருக்கிறதோட, இதுவரை இத்தனை ஏறி நடிச்சதில்லைங்கிற அளவில ஏறியும் சூப்பர் ஹீரோவாகியிருக்கார். இதுவரை சூப்பர் ஹீரோவான நடிகர்கள் கூட ஃபேன்டஸியாதான் அப்படி ஆகியிருக்காங்க. ஆனா இவர்தான் முதல்முதலா லாஜிக்கா சமுதாயத்துக்காக சூப்பர் ஹீரோவா ஆகியிருக்கார். இந்தப்படத்தோட ஸ்பெஷாலிட்டியே ஹீரோவைப் போல, ஹீரோயின்கள் போல, வில்லன்களைப்போல மக்களும் இதுல கேரக்டர்களா வர்றதுதான்.

சில வசனங்கள் ஹீரோக்களுக்குப் பேர் கொடுக்கும். சில வசனங்கள் ஹீரோக்களால புகழடையும். இதுல அப்படி ஒரு வசனம்... விஜய் பேசற ‘உழைக்கிறவன் வியர்வை தாய்ப்பாலைவிட உயர்வானது...’ இது டிரெய்லர்ல வெளியான நாளிலிருந்தே மத்த டைரக்டர்கள் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டற அளவுக்கு பவர்ஃபுல்லா அமைஞ்சிடுச்சு. ‘நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே... காட்டாம இருந்தா நல்லா இருக்குமாங்ணா..?’ன்னு அவர் பேசற இன்னொரு வசனம் தியேட்டர்கள்ல பட்டையைக் கிளப்பும்னு நம்பலாம்.

இதுல எந்த அளவுக்கு விஜய் இன்வால்வ் ஆகியிருந்தார்னா, பால்காரரா வர்ற அவருக்கு ஒரு சண்டை இருக்கு. அதுல இறங்கி அடிக்கணும்ங்கிறதால சட்டை போடாத வெற்று உடம்போட அவர் அதை செய்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதுக்காக ஒருமாசம் பிரேக் விட்டு அவரை உடம்பை ஏத்தச் சொல்லலாம்னு நானே முடிவு கட்டி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே சட்டையைக் கழற்றி, ‘இந்த அளவுக்கு இருந்தா போது மா..?’ன்னு கேட்டப்ப என் கண்களையே நம்ப முடியலை. அத்தனை கட்டுமஸ்தா ஏத்தி வச்சு அந்த ஃபைட்டுக்காகக் காத்திருந்தார். அவர் மேல சட்டை போட்டிருக்கும்போது அந்த உடம்பு தெரியலை. சட்டையைக் கழற்றினா கும்முன்னு தெரியறார். பேர் பாடியோட ஃபைட் யோசிச்சது நல்லதா போச்சு. இல்லாட்டி அந்த ஸ்பெஷல் விஷயத்தை ரசிகர்கள் மிஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். படத்துக்கே ஹைலைட்டா ஆகியிருக்கு அந்த ஃபைட்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா பெரிய இடத்துக்குப் போவார். ப்ரியனோட ஒளிப்பதிவும், வி.டி.விஜயனோட எடிட்டிங்கும் எனக்குத் தோள் கொடுத்திருக்குன்னா, புரட்யூசர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என் கனவுகளை நிஜமாக்க உதவியிருக்கார். அதோட ரிசல்ட், சென்சார்ல படத்தைப் பார்த்தவங்க பாராட்டி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறதுதான். மக்கள் சர்டிபிகேட்டும் இதுக்குக் குறைவிருக்காதுன்னு நான் எதிர்பார்க்கிறது போலவே ரசிகர்களும் இந்தப் படத்தை தீபாவளி ட்ரீட்டா எதிர்பார்க்கலாம்.

fredag den 14. oktober 2011

வேலாயுதம் யுஎஸ்ஏ ரைட்ஸ்


பெ‌ரிய நடிகர்களின் படங்களின் வெளிநாட்டு உ‌ரிமைக்கு மிகப்பெ‌ரிய அளவில் போட்டி உள்ளது. இளம் நடிகர்களில் விஜய் படத்துக்கு டிமாண்ட் அதிகம்.

வேலாயுதம் படத்தின் யுஎஸ் உ‌ரிமையை பெ‌ரிய போட்டிக்குப் பின் ‌ஜிகே மீடியா வாங்கியுள்ளது. இவர்கள் பல சலுகைகளையும் அறிவித்ததுள்ளனர். முதலில் டிக்கெட் கட்டணம். பத்து டாலர்தான் ஒரு டிக்கெட்டின் விலை. அடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.

இதுவரை வெளியான விஜய் படங்களைவிட அதிக வசூலை அமெ‌ரிக்காவில் வேலாயுதம் பெறும் என்கிறார்கள்.

onsdag den 12. oktober 2011

விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம்: ப்ரியங்கா சோப்ரா


பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ப்ரியங்கா சோப்ரா முதன் முதலில் கதாநாயகியாக களமிறங்கியது கொலிவுட்டில் தான்.
விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.என்னுடைய முதல்பட நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.

அப்போது பேட்டியளித்த ப்ரியங்கா சினிமாவில் நான் அறிமுகமானது கொலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் தனி விருப்பம் உண்டு.

அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல நடிகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமா முன்பை விட தற்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது.

சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவும், குறிப்பாக என்னுடைய முதல் நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன்

søndag den 9. oktober 2011

யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணி இரகசியம்


யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணிக்கு முக்கிய காரணமே ஏ.எம் ரத்னம் தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் இந்த கூட்டணியை சேர்த்து வைத்தது ஏ.எம்.ரத்னம் என்பது நாம் யாருக்கும் தெரியாது.

விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி இயக்குனர் கெளதமை ஆலோசனைக்காக உட்கார வைத்தது ஏ.எம்.ரத்னம்தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

கதை விஜய்க்குப் பிடித்துப்போனதால், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று படத்தை கெளதம் ஆரம்பித்துவிட்டாராம்.

படப்பிடிப்புகள் அமெரிக்காவில் ஆரம்பமாகி ஐரோப்பாவில் முக்கிய இடங்களிலும் எடுக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான படப்பிடிப்புகள் நியூயார்க்கில் எடுக்கப்படுகிறது.

lørdag den 24. september 2011

வேலாயுதம் ‌ரிலீஸ் தேதி



விஜய் நடித்திருக்கும் வேலாயுதம் ‌ரிலீஸ் தேதி அதகார‌ப்பூர்வமாக‌த் தெ‌ரிய வந்திருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட இப்படம் அதற்கு முன்பே திரைக்கு வருகிறது.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். ஜெனிலியா, ஹன்சிகா என விஜய்க்கு இரு ஜோடிகள். பழைய தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் அக்டோபர் 26 தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 25ஆம் தேதியே திரைக்கு வருகிறது. இதனை படத்தின் வெளிநாட்டு உ‌ரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம் தெ‌ரிவித்துள்ளது.

tirsdag den 20. september 2011

விஜய்யின் புதிய ஜோடி



விஜய், முருகதாஸ் இணையும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார் என்ற நம்முடைய நேற்றைய செய்தி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாடல் அழகி ஏஞ்சலா ஜா‌ன்ஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து இந்தப் படத்தை தயா‌ரிக்கின்றனர்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 'நண்பன்'!


ஷங்கர் இயக்கும் படம் ஒன்று எந்த பரபரப்பும் இல்லாமல் இத்தனை அமைதியுடன், வேக வேகமாக படமாவது அநேகமாக நண்பனாகத்தான் இருக்கும்!

படம் ஆரம்பித்த போது, யார் ஹீரோ என்பதில் மட்டும் மகா குழப்பம் நிலவியது. விஜய்தான் ஹீரோ என்று முடிவான பிறகு, ஊட்டி, சென்னை என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றிப் படமாக்கிய ஷங்கர், இதோ கிட்டத்தட்ட படத்தை முடித்தேவிட்டார்!

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், இலியானா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தை பிரமாண்டமாய் ரிலீஸ் செய்யும் வேலைகளை இப்போதிலிருந்தே துவங்கிவிட்டார் ஷங்கர்.

søndag den 28. august 2011

velayutham






இன்று வேலாயுதம் பாடல் வெளியீடு!


விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இது குறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இது குறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.

søndag den 21. august 2011

மதுரைக்கு வரும் விஜய்-வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!


மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.

150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

மேலும் காவலன் பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து விட்டதால் வேலாயுதம் விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரமாண்ட பேரணி மூலம் அழைத்துச் செல்லவுள்ளனர்.

மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், வேலாயுதம் பட பேனர்கள் பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விழாவில் வேலாயுதம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப் பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நாயகிகள் ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.

søndag den 14. august 2011

வேலாயுதம் ஓடியோ வெளியாகிறது


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் திகதி நடக்கிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஓடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஓடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர்.

ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம்.

இப்போது படத்தின் ஓடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். வரும் ஓகஸ்ட் 28-ம் திகதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

søndag den 3. juli 2011

லடாக்கில் வேலாயுதம்


விஜய் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் தயாராகும் படம் என்றால் அது வேலாயுதம்தான். ஜெயம் ராஜா இயக்கம், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிப்பு, இரண்டு ஹீரோயின்கள்...

கதையுடன் கமர்ஷியல் ச‌ரிவிகிதத்தில் கலந்திருப்பதாக பூ‌ரித்து‌ப் பேசுகிறார்கள். இதல் ராபின்ஹுட்டாக பல அதிரடி வேலைகள் செய்கிறாராம் விஜய். அத்துடன் விஜய் ஆண்டனியின் பாடல்களையும் சிலாகித் பேசுகின்றனர்.

லடாக்கில் சில காட்சிகளை எடுப்பதற்காக வேலாயுதம் யூனிட் லடாக்கில் முகாமிட உள்ளது. படப்பிடிப்பு முடியாவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமத்திலிருந்து சென்னை வரும் விஜய்க்கு நிதி நிறுவனம் செய்யும் மோசடி பெரும் ஏமாற்றத்தை‌த் தருகிறது. அதன்பிறகு அவர் எடுக்கும் முடிவுதான் வேலாயுதத்தின் மையம் என்கிறார்கள்.

torsdag den 30. juni 2011

விஜய்யின் வியத்தகு மாற்றம் !!


முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது.
விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்.


விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம்.

தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர்.

”சிங்கம்” படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னார் ஹரி. ”காக்க காக்க” கதையை கூட முதலில் இவரிடம் தான் சொன்னார் கவுதம். ”கஜினி” மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம் தான். ”அயன்” கதையின் நாயகனாக கே.வி.ஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரே தான்.

இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம்.

விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

onsdag den 22. juni 2011

உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்


முன் எப்பொழுதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார். இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார்.

ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார்.

சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.

tirsdag den 21. juni 2011

நடிகர் விஜய் வேண்டுகோள்


தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:

"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''

-இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

lørdag den 18. juni 2011

சீமான் அதிரடி மாற்றத்தில் ஆரம்பிக்கும் விஜயின் பகலவன்


எத்தனை தடைகள் வந்தாலும் 'நண்பன்' படத்தை முடித்துக் கொடுத்த கையோடு 'பகலவன்' படத்தை தொடங்குவதில் உறுதியாக இருக்கின்றனர்.
சீமான், விஜய், தாணு டீம். மருத்துவர் புகழேந்தியாக, எம்.பி.பி.எஸ். படித்து விட்டு கிராமத்துக்குச் சென்று எழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் விஜய் காலாவதியான மருந்து மாபியாவுடம் மோதுவதுதான் கதையாக இருந்ததாம் முதலில்.

ஆனால் தற்போது அதிலும் ஒரு அதிரடி மாற்றத்தை சீமான் கொண்டு வந்து விட்டதால் 'பகலவன்' கதையில் பெரிய மாற்றம் என்கிறார்கள் சீமானின் உதவியாளர்கள். அதாவது அனைத்து துறைகளையும் கண்மூடித்தனமாக அரசு தனியார் மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதைதான் 'பகலவன்' என்கிறார்கள்.

படத்தின் புதிய திரைக்கதையின்படி டாக்டராக இருக்கும் விஜய்க்கும் ஒரு முரட்டு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் பிரச்சினை வெடிக்கிறது. அப்போது போலீஸ் அதிகாரி 'நீ ஒரு டாக்டர். காய்ச்சல்ன்னு வர்றவனுக்கு காலனா மாத்திரை கொடுக்குறவன் நீ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' என்று கேட்கிறாராம்.

இதில் கோபம்கொள்ளும் விஜய், ஐ.பி.எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக உயர்ந்து அந்த வில்லன் அதிகாரியுடன் மோதி காலாவதி மருந்து கும்பலை காலி பண்ணுவதுதான் விஜய்யின் 'பகலவன்' என்கிறார்கள். ஏற்கெனவே 'போக்கிரி' படத்தில் விஜய் போலீஸ் சீருடையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

torsdag den 16. juni 2011

விஜய்யின் ‌வேலாயுதம் ஓடியோ வெளியீடு


தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்த விஜய்யின் "வேலாயுதம்" படத்தின் ஓடியோ வெளியீடு அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி வெளியீடு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"காவலன்" படத்திற்கு பிறகு விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் "வேலாயுதம்".


அதிரடி ஆக்ஷன் கலந்த மசாலா படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா‌ மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். "ஜெயம்" ராஜா இயக்கும் இப்படத்தை, ஓஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடியோ வெளியீடு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வந்த நிலையில், அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி திட்டவட்டமாக வெளியீடு செய்ய இருக்கின்றனர்.

மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்.

VIJAY & SALMAN




mandag den 13. juni 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

lørdag den 11. juni 2011

சீனா புறப்பட்டார் விஜய்


ஷாங்காய் உலகப் படவிழாவில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு புறப்பட்டார் நடிகர் விஜய்.

சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற உலகப் பட விழா நடக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2500 படங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த விழாவில் திரையிட விஜய்யின் காவலன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் காவலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டார் விஜய். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாட்டு கலைஞர்களும் திரைப்படங்களும் பங்கேற்கும் இந்த விழாவில் நானும் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது", என்றார்.

torsdag den 9. juni 2011

பகலவன்...விஜய்க்குக் கதை சொல்லத் தயாராகும் சீமான்!


கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மைக்கை கையில் எடுக்கிறார் சீமான்.

விஜய் நடிக்க 'பகலவன்' படத்தை கலைப்புலி எஸ் தாணுவுக்காக தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கான எழுத்துப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட சீமான், அடுத்து விஜய்க்கு கதை சொல்ல தயாராகிறார்.

பகலவன் கதை என்ன? "அரசின் அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள். இது தொடர்ந்தால் நாடே முதலாளிகளின் கையில் அடைப்பட்டு விடும். இதனை எதிர்த்து போராடும் ஒரு வீரமான இளைஞனைப் பற்றிய படம் தான் 'பகலவன்'. கண்டிப்பாக விஜய்க்கு இந்த திரைப்படம் பெரும் மாற்றத்தை தரும், அவர் விரும்பும் துறைகளில்.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். நாயகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தம்பி விஜய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் முழு கதை மற்றும் திரைக்கதையை கூறி விடுவேன்.

tirsdag den 7. juni 2011

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்


தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த ஜூன் மாதம முழுவதும் அவரது பிறந்த நாளையொட்டி நலத் திட்டங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர் ரசிகர்கல்.

அதன்படி, வட சென்னையில் இன்று ஒரே நாளில் 10 விஜய் மன்றங்கள் 150 மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், 75 ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளையும் வழங்கினர். கார்னேசன் நகரில் ஏழைகளுக்கு உடைகள் வழங்கினர். கேசிஎஸ் கல்லூரி அருகே உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், ஸ்கூல் பைகள் வழங்கினர்.

மேலும் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினர். இந்த விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் பங்கேற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், "விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வலகையில் பெரிய உதவிகள் அறிவிக்கப்படும்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

onsdag den 1. juni 2011

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய்…?


கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார். ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

tirsdag den 31. maj 2011

முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்!


தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற உறுதுணையாக இருந்தது போல, தொடர்ந்து நற்பணிகள் பல செய்து அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய்.

காவலன் பட பிரச்சனை தொடர்பாக விஜய்க்கும், தி.மு.க.,விற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மோதல் விஜய்யையும், அவரது ரசிகர்களையும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வைத்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதிமுக., அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமது ரசிகர்கள் செயல்பட்டதற்காக, அவர்களை அழைத்து விருந்து வைத்தார் நடிகர் விஜய்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று(29.05.11) மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், “நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில். இவ்வாறு விஜய் பேசினார்.

பின்னர் நிகழ்ச்சியில் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பொறுப்புக்கு புஸ்ஸி ஆனந்த்தும், ஜி.பாஸ்கர் அவர்களும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்புரையாற்றி அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விஜய், பிரியாணி விருந்து கொடுத்தார்.

ஜெயம் ராஜா பிறந்த நாள்-கேக் கொடுத்த விஜய்


இயக்குநர் ஜெயம் எம்.ராஜா தனது பிறந்த நாளை வேலாயுதம் படப்பிடிப்பில் வைத்துக் கொண்டாடினார்.

இயக்குநர் எம்.ராஜா இன்று தனது பிறந்தநாளை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ‘வேலாயுதம்” படப்பிடிப்பில் கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவழைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார்.

நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் எம்.ராஜா.

ஏற்கனவே ‘வேலாயுதம்” படபிடிப்பின்போது நடிகை ஹன்சிகா மோத்வானி, கேமராமேன் ப்ரியன், தனக்கு தங்கையாக நடிக்கும் நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

mandag den 16. maj 2011

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து..விஜய்


நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார் நடிகர் விஜய்.

காவலன் படத்தை வெளியிட முடியாமல் கருணாநிதி அரசு நெருக்கடி கொடுத்ததால் அதிமுகவுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது விஜய்யின் மக்கள் இயக்கம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதிமுக வெற்றி பெற்றதும், தன்னைப் போலவே தமிழக மக்களும் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்று அறிவித்த விஜய், தேர்தல் முடிவு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நேற்று மாலை தனது தந்தையுடன் ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்த விஜய் வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

søndag den 15. maj 2011

விஜய் விஜயகாந்துக்கு நேரில் சென்று வாழ்த்து


தமிழகத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலளார் செல்வி. ஜெயலலிதாவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாலையே, தனது தந்தையார் இயக்குனர் சந்திரசேகரனுடன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிர்ச்சி வெற்றியீட்டி, எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமரவுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்தை, நேற்று மாலை நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததாகத் தெரிவிக்இச்சந்திப்பின் போது, இவருடன் இயக்குனர் அமீர், இயக்குனர் சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டதன் பின்னர், இவர்களோடு விஜய்காந் சிறிது நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகிறது.கப்படுகிறது.

torsdag den 5. maj 2011

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு


விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது சீனவின் முக்கிய நகரமான ஷாங்காயில் நடக்கும் 14வது உலகப் பட விழாவில் பனோரமா பிரிவில் தேர்வு பெற்றுள்ளது.

இந்த விழாவில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் இருந்து 2500 படங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வு பெற்றுளளது என விஜய்யின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கூறினார்.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டுள்ளார், என இந்த விழாவிற்கு படங்களை தேர்வு செய்து அனுப்பும் ஒருங்கிணைப்பாளர் ரேக்ஸ் தெரிவித்தார் .

tirsdag den 3. maj 2011

ஷங்கரை விஜய்யை புகழ்ந்து வருகிறார்


தனக்கு பழக்கமேயில்லாத வேகத்தில் நண்பன் படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். படத்தில் மூன்று ஹீரோக்கள் இரு‌ந்தாலும் எந்த இடையூறும் இல்லை, குறிப்பாக விஜய்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகிவிடுகிறார் விஜய். இது மொத்தப்பட யூனிட்டையும் ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. மாஸ் ஹீரோ என்ற எந்த பந்தாவும் இல்லை.

விஜய்யின் இந்த டெடிகேஷன் ஷங்கரை வியக்க வைத்திருக்கிறது. ஆச்ச‌ரியத்துடன் நெருங்கிய நண்பர்களிடம் விஜய்யை புகழ்ந்து வருகிறார்.