onsdag den 23. juni 2010

எதிர்பார்ப்பைக் கிளப்பும் பகலவன்


கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் அசத்திய சச்சினுக்குப் பின் மீண்டும் ஒரு முறை தாணு -விஜய் கூட்டணியில் பகலவன் வர இருப்பதை நாமறிவோம்.

தம்பிக்குப் பின் இயக்கத்துக்கு நீண்ட ஓய்வு விட்டிருந்த சீமான் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டார். சீமான் பிரபாகரனைச் சந்தித்தபோது தம் மனதிலிருந்த இரண்டு கதையை அவரிடம் பகிர்ந்து கொண்டாராம்.

அவற்றில் ஒன்றுதான் பகலவனின் கதை. படப்பிடிப்பு தொடங்குமுன்னே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்குநர் ஜெகன்ஜி இயக்கத்தில் நடித்து வரும் சீமான் அந்தப் படம் முடிந்த கையோடு பகலவனைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ingen kommentarer:

Send en kommentar